SHIRDI LIVE DARSHAN

Monday 3 February 2014

நாமக்கல் அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா 09-02-14

அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா ( கும்பாபிசேகம் ) 09-2-14



அருள் மிகு நாமகிரி தாயாருக்கு  கும்பாபிசேகம்வரும் ஞாயிறு  09 -02-14 அன்று காலை 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் நடைபெற உள்ளது

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

ரொம்பவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த தாயார் .

நாமக்கல் நரசிம்மர் , ஆஞ்சநேயர் , ரங்கநாதர்  விட இத் தாயரே விஷெசமானவர் .சக்தி வாய்ந்தவர்

கணித மேதை ராமானுஜத்துக்கு அருள் புரிந்தவர் ,  அவரின் கணிதத்திற்கு இத் தாயரே பதில் தருவதாக அவரே பல இடங்களில் கூறி இருக்கிறார்




இந்த கோவிலும் , இங்கு வழங்கும் தீர்த்தமும் மிக மிக சக்தி வாய்ந்தது, ( அனைத்து  தீமைகளையும் விரட்ட கூடியது ) என்று என் குரு நாதர் சாய் பாபா உபாசகர் சொல்லியிருக்கார்

( எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது இத் தாயாரால் ,என்னோட  IBPS BANK INTERVIEW க்கு  முதல் நாள் நாமகிரி தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க போனேன் , ரொம்பவும் உருக்கமா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் INTERVIEW  க்கு போனேன்


நான்கு பேர் என்னை INTERVIEW செய்தார்கள் . அவர்களுள் மூன்றாவது நபர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தயாராய் பற்றி தான்

கணித மேதை ராமனுஜம் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு தாயாரை பற்றி

ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது , வந்து தாயாருக்கு நன்றி சொன்னேன் )

வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் பூரண அனுகிரகதை பெற்று கொள்ள வேண்டுகிறேன்





1 comment:

  1. விழா சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete