SHIRDI LIVE DARSHAN

Saturday 1 June 2013

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி .MP3 - இளையராஜா



      திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்


    (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

    திருச்சிற்றம்பலம் 

    முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
    முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
    சக்தியும் சோமியும் பார்மகளும்
    நாமகளோடுபல்லாண்டிசைமின்
    சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
    கங்கையும் வந்து கவரிகொண்மின்
    அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195


    பூவியல் வார்சடை எம்பிராற்குப்
    பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
    மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
    வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
    கூவுமின் தொண்டர் புறநிலாமே
    குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
    தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
    செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

    சுந்தர நீறணந் தும்மெழுகித்
    தூயபொன்சிந்தி நிதிநிரப்பி
    இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
    எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
    அந்தார் கோன்அயன் தன்பெருமான்
    ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
    எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
    கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197

    காசணி மின்கள் உலக்கையெல்லாம்
    காம்பணி மின்கள் கறையுரலை
    நேசமுடைய அடியவர்கள்
    நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
    தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
    பாசவினையைப் பறிந்துநின்று
    பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198

    அறுகெடுப்பார் அயனும்அரியும்
    அன்றிமற்றிந்திர னோடமரர்
    நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்
    நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம்
    செறிவுடை மும்மதில் எய்தவில்லி
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
    முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
    காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199

    உலக்கை பலஒச்சு வார்பெரியர்
    உலகமெலாம்உரல் போதாதென்றே
    கலக்க அடியவர் வந்துநின்றார்
    காண உலகங்கள் போதாதென்றே
    நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
    நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
    மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து
    பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200

    சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்
    தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
    நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
    பாடக மெல்லடி யார்க்கு மங்கை
    பங்கினன் எங்கள் பராபரனுக்கு
    ஆடக மாமலை அன்னகோவுக்
    காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201

    வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
    வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
    தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
    சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
    நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
    நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
    ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
    ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202

    வையகம் எல்லாம் உரலதாக
    மாமேரு என்னும் உலக்கை நாட்டி
    மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
    மேதரு தென்னன் பெருந்துறையான்
    செய்ய திருவடி பாடிப்பாடிச்
    செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
    ஐயன் அணிதில்லை வாணனுக்கே
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203

    முத்தணி கொங்கைகள் ஆடஆட
    மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
    சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
    செங்கயற் கண்பனி ஆடஆடப்
    பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
    பிறவி பிறரொடும் ஆடஆட
    அத்தன் கருணையொ டாடஆட
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204


    மாடு நகைவாள் நிலாவெறிப்ப
    வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
    பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
    பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
    தேடுமின் எம்பெருமானைத்தேடி
    சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
    ஆடுமின் அம்பலத் தாடினானுக்
    காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205

    மையமர் கண்டனை வானநாடர்
    மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
    ஐயனை ஐயர்பிரானைநம்மை
    அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
    பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
    போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
    பையர வல்குல் மடந்தைநல்லீர்
    பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206

    மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
    வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
    என்னுடை ஆரமுதெங்களப்பன்
    எம்பெருமான் இம வான்மகட்குத்
    தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
    தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
    பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
    பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207

    சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
    தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
    செங்கனி வாயிதழுந்துடிப்பச்
    சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
    கங்கை இரைப்ப அராஇரைக்குங்
    கற்றைச் சடைமுடி யான்கழற்கே
    பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
    பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208

    ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
    நாடற் கரிய நலத்தை நந்தாத்
    தேனைப் பழச்சுவை ஆயினானைச்
    சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
    கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
    கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
    பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
    பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209

    ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ
    டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
    தேவர் கனாவிலுங் கண்டறியாச்
    செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
    சேவகம் ஏந்திய வெல்கொடியான்
    சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்
    சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
    செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210

    தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
    சிவபுரம் பாடித் திருச்சடைமேன்
    வானக மாமதிப் பிள்ளைபாடி
    மால்விடை பாடி வலக்கையேந்தும்
    ஊனக மாமழுச் சூலம்பாடி
    உம்பரும் இம்பரும் உய்யஅன்று
    போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
    பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211

    அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
    அருக்கன் எயிறு பறித்தல்பாடி
    கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
    காலனைக்காலால் உதைத்தல்பாடி
    இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
    ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
    நயந்தனைப் பாடிநின் றாடியாடி
    நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212

    வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
    மத்தமும்பாடி மதியம்பாடிச்
    சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
    சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
    கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
    கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
    இட்டுநின் றாடும் அரவம்பாடி
    ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213

    வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
    மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
    சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
    துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
    பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
    பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
    ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 




    திருச்சிற்றம்பலம்

    --------------------------------------------------------------------------------------------------

    12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

    1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

    2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

    3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

    4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

    5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

    6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

    7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

    8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

    9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

    10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

    12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

     

    சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)


     live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

     http://www.somnath.org/live-darshans.aspx 


    மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



     live dharshan - நேரடி ஒளிபரப்பு 

    http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


    ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

     
    காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




    live dharshan - நேரடி ஒளிபரப்பு   


    http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

     

No comments:

Post a Comment