SHIRDI LIVE DARSHAN

Saturday 14 April 2012

அகத்தியர் அருளிய திருமகள் துதி


                                                                            தமிழில் அதிவீரராம பாண்டியர்


1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்
2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே...
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்...
3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள்
அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.....
4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ.....
5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோடும்....
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள் நோக்கம் அடைந்து ளாரே.....
6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும்
எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.....
7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவன் மருவல் செய்யாள்....
                                                                
                                                                 மஹாகவி பாரதியாரின் மஹாலக்ஷ்மிக் கவிதை


பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப் பூ  - அதில்
இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள்
நாற்கரத் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியர் பசுமையை விரும்பிடுவாள்
நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தலிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தன் தோளிலும் - உடல்
வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்
பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிவிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.
மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் - உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றி கொள் படையினிலும் -பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் - நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம்
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.
                                                                           
                                                                    மகாலக்ஷ்மி மந்திர மாலை

நிஜமான பலன் தரும் நேர்த்தியான ஸ்லோகங்கள், வடமொழியில், சூக்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், திருமகளின் திருவருளைப் பெற உதவும் நிகரற்ற ஸ்லோகமாக தேவி புராணம் சொல்லும் துதி, சூக்தம். வடமொழியில் உள்ள வளம் தரும் ஸ்ரீ சூக்தம் துதி, இங்கே பொருள் மாறாமல் தமிழ்த் துதிகளாகத் தரப்பட்டுள்ளது. பொன்மகளைத் துதிக்கும் இப்பாடல்களைச் சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.
வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் இவற்றின் வரிசையில் மேலான சூக்தங்களும் உள்ளன என்பதால், சூக்தங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பது, நிதர்சனமான உண்மை. ஸ்ரீ தேவியைப் போற்றும் ஸ்ரீசூக்தத்தின் தமிழாக்கமான, இம்மந்திரமாலையை மனம் ஒன்றிச் சொல்லுங்கள், மகத்தான செல்வமளிப்பாள் மலர்மகள்.

ஓம் அக்னிதேவனே! பொன்வெள்ளி மாலையணி
பொன்னிற மேனியாளை பொன்னாய் ஒளிர்பவளை
முழுநிலவு முகத்தவளை பெரும் பாவச்சுமை போக்கும்
புனிதமான இலக்குமியை என்னிடம் எழச்செய்வாய்!
பொன்பொருள் பசுக்கள் குதிரைகள் உறவுகளை
எவளருளால் என்றென்றும் பெற்று மகிழ்வேனோ
அவளந்த மகாலட்சுமி இமைப்பொழுதும் எமைவிட்டு
விலகாது இருக்க அக்னிதேவனே! அருள்வாய்.
குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்
ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!
கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே
பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.
குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்
திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்
அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின்
தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்
அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும்
அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.
பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன்
பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்
நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு
நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்
கடும்பசி பிணிதாகம் கொண்டிளைத்த மூத்தவளை
மூதேவியை அண்டாமல் அகற்றுகின்றேன்
இளையவளே என்னில்லில் இல்லாமை இயலாமை
இடர்யாவும் இல்லாமல் அகற்றி அருள்வாய்
மணமிகு தூயவளே! வெற்றிகொள்ள முடியாதவளே!
திறமிகு வலிமை தருபவளும் அனைத்தும்
நிறைமிகு கொண்டவளும் எவ்வுயிர்க்கும் தலைவியுமான
பொருள் மிகு பொன்மகளே நீயிங்கு எழுந்தருள்வாய்
அருள்மிகு அநகாவே நான்விரும்பும் விருப்பங்கள்
மனம் மிகு மகிழ்வு வாக்கில் உண்மை
வளம் மிகு தரும் உணவு பால்மிகு தரும்பசு
புகழ்மிகு கீர்த்தியாவும் பெற்றுமகிழ அருள்வாய்.
கர்தமமா முனிவரேயுன் குலப்புதல்வியாம் பத்மமாலினி
அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.
பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால்
உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி
என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம்
உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்
அக்னிதேவனே! புனிதநீருரை குங்குமநிற பத்மமாலினியை
உணவூட்டி உலக உயிர் வளர்க்கும் கருணைவடிவை
சந்திரனே அன்னவளை பொன்னிற மேனியாளை
மாதரசியை என்னில்லில் எழுந்தருளச் செய்வாய்
கம்பீரமாய் செங்கோலேந் தியகருணை மனத்தவளை
பொன்னி புண்ட செந்நிறத்தவளை அருணனை
பழித்த ஒளி யுடையாளை பொன்னான ரமாவை
என்னிடம் எழுந்தருளச் செய்வாய் அக்னிதேவனே!
மிடுகனகம் பால்பசுக்கள் பணிப்பெண் அசுவங்கள்,
ஏவல்செய் மானுடமும் பெற்றின் புற்றிருக்க
அருள்செய்யும் அன்னை அலைமகள் இமைப்பொழுதும்
எனைவிட்டு அகலாதிருக்க ஆவன செய் அக்னிதேவனே!
திருமகளின் அருள்வேண்டி தூயவனாய் புலனடக்கம்
உள்ளவனாய் மந்திரங்கள் பதினைந்தும் ஒரு முகமாய்
உருச்செய்தும் நெய்கொண்டு ஹோமம் செய்தும்
உள்ளமுருகி வழிபட அவளருள் சித்திக்குமே!
நற்பலன்கள் யாவையும் நல்கும் மகாலட்சுமி
மந்திரங்களை உலகுக்கு அளித்த முனிவர்கள்
அனந்தர் கர்தமர் சிக்லீதர் யெனும்மூவர்
அதிதேவதையாய்நிலை பெற்றவள் ஸ்ரீதேவியே!
தாமரையன்ன முகமும் கண்ளும் கால்களும்
எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே
எவ்வெப் பொருள்களால் வளம்பெற்று வாழ்வேனோ
அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள்வாய்
தனம்தரும் பசுதரும் குதிரைதரும் கோமளமே
தன லட்சுமியே! எனதாசை யாவும் நிறைவேறி
இகபர சுகம்பெற்று இனிதே வாழவழி
செய்யும் பெருநிதிமிகத் தருவாய் உகந் தெனக்கே.
உலகத்தாயே! புத்திர பௌத்திர தனதான்யம்
யானை குதிரை வாகனம்தரும் ஸ்ரீநிதியாய்
விளங்கும் திருமகளே என்னை நீள் ஆயுள்
ஆரோக்கியம் பெருநிதி உள்ளவனாய் உயர்த்துவாய்.
திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன்
சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி
வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும்
வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.
குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி
ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே
சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின்
ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்.
கருடனும் விருத்திராசுரனை வென்ற
இந்திரனும் சோமரசம் இனிமையாய்ப் பருகட்டும்
சோமயாகம் செய்ய விரும்பும் எனக்குத்
திருமகள் செல்வத்தை வாரிவாரி வழங்கட்டும்
புண்ணியம் மேலோங்க திருமகள் தியானமும்
மகாலட்சுமி மந்திரஸ்துதியும் மனமொன்றிச் செய்யும்
அருளாளரை கோபம் லோபம் பொறாமை
கெடுமதி என்னும் தீக்குணங்கள் தீண்டுவதில்லை.
தான்யலட்சுமி கருணையாள் மின்னலுடன் மேகங்கள்
மழையை இரவும் பகலும் பொழியட்டும்
விதைகள் யாவும் நன்கு முளைத்து வளரட்டும்
தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.
பத்மப்பிரியே! செந்தாமரை கைகொண்ட பத்மினியே
செந்தாமரை மீதமர்ந்த செந்தாமரைக் கண்ணியே
விஷ்ணுப் பிரியே! உலகோர் விரும்பி யேத்துமுன்
திருவடித் தாமரையை யென்மேல் வைத்தருள்வாய்
வெண்பட்டு இடையாளை மேலாடை அணிந்தவளை
செந்தாமரைக் கைகொண்டு மலர்த்தாமரை அமர்ந்தவளை
கம்பீரமிகு நாபிச்சுழி யழகும் பின்னழகும்
தாமரைக் கண்ணழகும் கனமிகு மார்பழகும்
நாணமுடன் குனிந்த தலையழகும் கொண்டவளை
தேவலோக யானைகள் ரத்தின பொற்கலச
நீர்கொண்டு மங்கல நீராட்ட மகிழ்பவளை
மங்களங்கள் நிறைமங்கள நாயகிமகா லட்சுமியை
பாற்கடல் அரசனின் புதல்வியாய்த் தோன்றி
தேவமாதர் யாவரும் செய்யும் பணியேற்று
உலகம் ஏற்றமுற ஒரே தீபமாய் சுடர்விட்டு
ஸ்ரீரங்கம் தனில்வாழும் தலைவியே செந்தாமரை
மீதமர்ந்த நின்கடைக் கண்பார்வை பட்டே
பிரம்மனும் இந்திரனும் சிவனும்பெருமையுற்றனர்
மூவுலகும் தன்னில்லாய்க் கொண்டு வாழும்
முகுந்தனின் அன்பரசியே உனையென்றும் வணங்குகிறேன்
சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும்
சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்
பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது
வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும்
சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள
மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்
பாசம் அங்குசம் இருகை ஏந்த
வரஅபய முத்திரைகளை மற்றிருகை காட்டியருள
செந்தாமரை மீதமர்ந்த ஆதிசக்தி முக்கண்ணியே
கோடியிளம் சூரிய ஒளியினும்மேலாய் ஒளிவீசி
உலகாளும் உத்தமியே உனைநான் ஆரா திக்கிறேன்.
மங்களங்கள் யாவிலும் மங்களமாய் நிறைந்தவளே
வேண்டிய நலமருளும் மங்களமானவளே
சரணடைவதற் கேற்றதேவி முக்கண்ணி நாராயணியே
நாராயணி சரணம்! நாராயணி சரணம் !!
தாமரை கைகொண்டு தூயவெள்ளாடை நறுமண
மாலையணிந்து செந்தாமரை மீதமர்ந்த
பகவதியே பகவனுக்கு வல்லமைதரும் வடிவழகே
வேண்டுவோர் வேண்டியாங்கு வரமளித்து மூவுலகை
வாழவைக்கும் வளர்திருவே என்னையும் வாழவைப்பாய்
மகாவிஷ்ணு மனத்திற்கு உகந்த மாதவி
மாதவன் மனையாள் பூமிதேவி திருமாலின்
திருமார்பில் நிறைந்தவள் அச்சுதன் வல்லமை
யென போற்றப்படும் ஸ்ரீதேவியைச் சரண டைந்தேன்
ஓம் மகாலட்சுமியை என்றும் அறிந்து போற்றுவோம்
எங்கும் நிறை திருமாலின் துணையின் துணை வேண்டி
தியானிப்போம் அந்த லட்சுமி தேவியே
அவள்பாதம் பணிய நல்வழி காட்டட்டும்.
மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம்
வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும்
எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம்
நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள்
தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம்
கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்.
ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.
எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.

                                                                                     திருமகள் துதி
பார்கவியின் அருள் இருந்தாலே, பாரினில் செல்வம் சேரும். இதனை உணர்ந்துதான் ,பார் புகழும் கவியான பாரதியும், திருமகளைப் போற்றிப் பாடியுள்ளார்.
பாற்கடல்நாதன் பத்தினியின் பார்வைபட்டால், பஞ்சம் யாவும் நீங்கி பாரினில் செல்வம் சேரும் என்று புராணங்களும் புகழ்கின்றன. எங்கெங்கெல்லாம் இருப்பாள் செல்வமகள் என்று, பட்டியல் இட்டிருக்கிறார், இப்பாடலில் பாரதி அங்கெல்லாம் இருப்பதோடு, இந்தத் துதி எங்கெல்லாம் பாடப்படுகிறதோ அங்கேயும் எழுந்தருள்வாள் திருமகள்.
பூமகள் அருள் வேண்டி, புகழ்க்கவி பாடிய இத்துதியை, பொன்மகளை நினைத்தபடி, விளக்கேற்றி வைத்துச் சொல்லுங்கள்...அலைமகள் அருளால் நிலையான செல்வம் சேரும்.
நித்தமுனை வேண்டி மனம்
நினைப் தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்பதெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே! திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய், திருவே!
உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்
அன்னம் நறுநெய் பாலும்
அதிசயமாய்த் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நினைத்திருப்பேன், திருவே!
ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடு மணிச் செல்வ மெல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங்களியே திருவே!

                                                                                              திருமகளே சரணம்
பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.
நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தந் தோளினிலும் - உடல்
வெயர்த்திட உழைப்பவர்
தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந்த தருள் புரிவாள்.
பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.
மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் - உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்,
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,
நண்ணிய தேவிதனை - எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றிகொள் படையினிலும் - பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்,
நற்றவ நடையினிலும் - நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்
கற்றபல கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளிபெறக் கலி தவிர்ப்போம்.

2 comments:

  1. திருமகள் துதிப் போல் தமிழ்-இல் விஷ்ணு ஸ்லோகம் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. தற்சமயம் இல்லை , கிடைத்த பிறகு அனுப்புகிறேன்

      Delete