SHIRDI LIVE DARSHAN

Tuesday 31 January 2012

ஆன்மா அழிவதில்லை!


ஆன்மா அழிவதில்லை!


  ""மனிதன் உல​க​மெல்​லாம் தன​தாக்​கிக் கொண்​டா​லும் அவன் ஆன்​மாவை இழப்​பா​னெ​னில் அவ​னுக்கு வரும் பயன் என்ன?​'' என்​கி​றது கிறிஸ்​து​வர்​க​ளின் வேத நூலான பைபிள்.​ மாட மாளி​கை​யி​லும்,​​ கூட கோபு​ரத்​தி​லும் ஆடம்​பர வாழ்க்கை வாழும் மனி​த​னும் தன் வாழ்​வுக்​குப் பின் சொந்​த​மெ​னக் கொண்​டா​டப்​போ​வது இறுதி மூச்சு அடங்​கிய ​ பின் இளைப்​பா​றக் கிடைக்​கும் அந்த ஆறடி நிலம்​தானே?​ ​ ​
​ ​ ​ எனவே,​​ இவ்​வு​ல​கில் நாம் வாழ்க்​கை​யில் தரும காரி​யங்​க​ளா​லும்,​​ நற்​செ​யல்​க​ளா​லும் புண்​ணிய பேற்​றி​னைச் சம்​பா​தித்து,​​ மறு​வு​ல​கில் இறை​வ​னோடு என்​றென்​றும் வாழும் தகு​தி​யி​னைப் பெற வேண்​டும்.​ ​
​ ​ ​ ​ உட​லா​னது மண்​ணோடு மண்​ணாக மக்​கிப் போயி​னும்,​​ அழி​யாத ஆன்மா இறை​வ​னோடு ஒன்​றி​ணை​யும் இயல்பை உடை​யது.​ ஆண்​ட​வ​ரின் இல்​லத்​தில் மகிழ்​வோடு வாழும் பேறு பெற்ற இந்த ஆன்​மாக்​க​ளி​டம் நாம் இறைஞ்​சும்​போது,​​ நம் வேண்​டு​தல்​களை இறை​வன் கண்​டிப்​பா​கக் கரு​ணை​யு​டன் கண்​ணோக்​கு​வார்.​ ​ இந்த நம்​பிக்​கை​யி​னால்​தான் இறந்​தோரை அடக்​கம் செய்​யும் கல்​ல​றையை,​​ தோட்​டத்​தைப் பரா​ம​ரிப்​ப​து​போல் கிறிஸ்​து​வர்​கள் பரா​ம​ரித்து வரு​கி​றார்​கள்.​
​ ​ ஒவ்​வொரு ஆண்​டும் ஒரு குறிப்​பிட்ட நாளில் ​ ​(கல்​ல​றைத் திரு​நாள்)​ நம்மை விட்​டுப் பிரிந்து சென்ற இறந்​தோரை நினைவு கூரு​கின்​ற​னர்.​ இறந்​து​போன உற​வி​னர்​க​ளை​யும் நண்​பர்​க​ளை​யும் நினை​வில் இருத்தி,​​ அவர்​க​ளின் கல்​ல​றை​யைச் சுத்​தம் செய்து மெழு​கு​வர்த்தி பொருத்தி,​​ பக்​தி​யோடு வேண்​டு​தல் செய்​கின்​ற​னர்.​ ஒவ்​வொரு கல்​ல​றை​யின் தலை​மாட்​டி​லும் காணப்​ப​டும் சிலு​வைக் கல் மீது இறந்​தோ​ரின் பெயர்,​​ பிறப்பு,​​ இறப்பு,​​ பொருத்​த​மான பைபிள் வச​னங்​கள் ஆகி​யன பொறிக்​கப்​பட்​டி​ருக்​கும்.​
​ ​ கல்​ல​றைத் திரு​நாள் அன்று மட்​டும் ​ என்று இல்​லா​மல்,​​ உற்​றார்-​உற​வி​ன​ரின் இறந்த தினத்​தன்​றும்,​​ முக்​கி​ய​மாக வீட்​டில் கொண்​டா​டப்​ப​டும் விசேஷ தினங்​க​ளன்​றும் பக்​தி​யுள்ள கிறிஸ்​து​வர்​கள் சர்ச் தவிர கல்​ல​றைக்​கும் சென்று பிரார்த்​தனை செய்​வது வழக்​கம்.​
​ ​ ​ தறி கெட்டு ஓடும் எண்​ணங்​களை ஒரு கட்​டுக்​குள் நிலை நிறுத்தி,​​ தேவை​யற்ற ஆசை​க​ளுக்கு ஒரு கடி​வா​ளம் இட்டு -​விண்​ணு​லகை நோக்​கிய பய​ணத்​திற்​கான சரி​யான பாதை​யில் நம்​மைச் செலுத்​து​வ​தற்கு,​​ மறு​வு​லக வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னை​க​ளும்,​​ இறந்​தோ​ரைப் பற்​றிய நினை​வு​க​ளும் பெரி​தும் உத​வு​கின்​றன.​ எனவே நேரிய ​ வாழ்க்கை வாழ்​வோம்;​ அழி​யாத ஆன்​மா​வுக்கு மரி​யாதை செலுத்​து​வோம்!​ ​ விண்​ணு​லக வாழ்​வில் இறை​வ​னோடு ஒன்​றிக்​கும் பாக்​கி​யம் பெறு​வோம்.

No comments:

Post a Comment