SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

பிரம்ம முகூர்த்தம்

சந்தியாவந்தனம் செய்வது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது போன்றவற்றை 


அதிகாலையிலிருந்து நகர்த்தி காலை பத்து மணிக்குள் முடித்துக் கொள்ளலாமா?  என்று 


இன்றைய நவீன மனிதன் கேட்கிறான்.

அவன் கேட்பதில் தவறு இருப்பதாக சொல்ல முடியாது. 

நவீன மருத்துவர் ஒருவர் என்னிடம் ஒரு தகவலை சொன்னார்.  


    முன்பெல்லாம், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தான் வியாதிகளின் தாக்கம் அதிகம் இருக்கும்.  

இந்த வயதில் இந்த வியாதி தான் வரும் என்று எளிதாக சொல்லிவிடலாம். 

 ஆனால் இப்பொழுது அறுபது வயதில் வரக்கூடிய வியாதி இருபது வயதில் வருகிறது.  

சில வியாதிகள் எதனால் வருகிறது இது என்ன வியாதி என்று கூட தெரியவில்லை என்றார்.  

இந்த நிலைக்கு காரணம் என்ன?

 மிக முக்கியமாக இரண்டு விஷயத்தை சொல்ல வேண்டும். 

 ஒன்று நமது உணவு முறை மாறிவிட்டது. 

 மற்றொன்று நமது பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. 

 உயிர்களாக படைக்கப்பட்ட எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டும். 

 குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.  

தண்ணீர் துவங்கி மனிதன் வரைக்கும் இரவு பொழுது என்பது உறக்கத்திற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஆகும்.

 உறங்க வேண்டிய நேரத்தில் விழித்து இருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். 

 அதனால் தான் நமது பெரியவர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள்.

  நாம் நமது இரவு நேரத்தை அமெரிக்கர்களின் பகல் பொழுதிற்காக பலி கொடுக்கின்றோம். 

 இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுவார்கள் என்று நமக்கு தெரியும்.  

அவர்களின் மிக முக்கியமான தொழுகை அதிகாலை மூன்று மணிக்கு உண்டு. 

 மூன்று மணி முதல் மூன்று ஐந்து நிமிசம் வரை பிரபஞ்சம் முழுவதும் ஒரு வித அமைதி நிலவுகிறது.  

அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற பல பிராத்தனைகள் கண்கூடாக நிறைவேறியிருக்கிறது. 

 நமது பெரியவர்களும் பிரம்ம முகூர்த்தம் என்பது அந்த நேரத்தில் தான் துவங்குகிறது என சொல்கிறார்கள்.

  நம்மால் மூன்று மணிக்கு எழுந்திருக்க முடியுமா என்று சொல்வதெல்லாம் வெறும் சப்பை கட்டுதல் ஆகும்.

 மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்.  என ஒரு அழகான கவிதை வரி உண்டு.  

நம் வேலைகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி கொண்டால் அதிகாலை துயில் எழுச்சி என்பது சாத்தியப்படாத விஷயமே அல்ல.  

ஆரோக்கியம் வேண்டுபவர்கள் ஒழுங்கும் கட்டுப்பாடும் வேண்டுபவர்கள் காலையில் கண் விழிப்பது சாலச்சிறந்ததாகும்.  

மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே சாஸ்திரங்கள் அதிகாலை துயில் எழுச்சியை வலியுறுத்துகின்றன.

No comments:

Post a Comment